ETV Bharat / state

வயதில் செஞ்சுரி அடித்த பாட்டி!

author img

By

Published : Mar 5, 2021, 11:58 AM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐந்து தலைமுறை கண்ட 101 வயது பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வயதில் செஞ்சுரி அடித்த பாட்டி!
வயதில் செஞ்சுரி அடித்த பாட்டி!

மாறிப்போன இயற்கைச்சூழல், மாறுபட்ட உணவுப்பழக்க வழக்க முறைகள் உட்பட பல்வேறு காரணங்களால் மனிதனின் ஆயுள்காலம் குறைந்துகொண்டே வருகிறது. முன்னொரு காலத்தில் நூறு, நூற்றிபத்து வயது என சர்வசாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்த மனித இனம் இன்று, எண்பது வயதுகளைக்கூட எட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இயந்திரமயமாகிப்போன மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒவ்வொருவரும் அவசர கதியில் பரபரப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இதில் உடல் நலத்தைப் பேணுவதில் யாரும் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. கிடைத்த உணவை உண்டு காலம் போகிறப்போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில், தங்களது உடல் நலத்தில் அக்கறை கொண்டு, அதனைப் பேணி பாதுகாப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். லட்சத்தில் ஒருவர்கூட தேறமாட்டார்கள். அப்படி லட்சத்தில் ஒருவராக இருப்பவர் தான் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியைச் சேர்ந்த மகாதேவன் மனைவி பழனியம்மாள். வயதில் செஞ்சுரி அடித்து தனது 101ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார், பாட்டி பழனியம்மாள்.

அதுமட்டுமின்றி ஐந்து தலைமுறைகளைக் கடந்துள்ள பாட்டிக்கு 4 மகன்கள், 3 மகள்கள், 19 பேரன்கள், பேத்திகள், 25 கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள், 2 எள்ளுப் பேத்திகள் உள்ளனர்.

101 வயது பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம்

இவர் இன்றும் தனது பணிகளை தானே செய்து வருகிறார். மனிதன் எப்படி ஆரோக்கியம் பேண வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்துவரும் இந்த பாட்டியின் 101ஆவது பிறந்த நாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து கேக் வெட்டியும், பாத பூஜைகள் செய்தும் வெகு சிறப்பாக கொண்டாடினர்.

இதையும் படிங்க...குட்டி நாயைத் தத்தெடுத்து தாயான ஆண் குரங்கு

மாறிப்போன இயற்கைச்சூழல், மாறுபட்ட உணவுப்பழக்க வழக்க முறைகள் உட்பட பல்வேறு காரணங்களால் மனிதனின் ஆயுள்காலம் குறைந்துகொண்டே வருகிறது. முன்னொரு காலத்தில் நூறு, நூற்றிபத்து வயது என சர்வசாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்த மனித இனம் இன்று, எண்பது வயதுகளைக்கூட எட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இயந்திரமயமாகிப்போன மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒவ்வொருவரும் அவசர கதியில் பரபரப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இதில் உடல் நலத்தைப் பேணுவதில் யாரும் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. கிடைத்த உணவை உண்டு காலம் போகிறப்போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில், தங்களது உடல் நலத்தில் அக்கறை கொண்டு, அதனைப் பேணி பாதுகாப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். லட்சத்தில் ஒருவர்கூட தேறமாட்டார்கள். அப்படி லட்சத்தில் ஒருவராக இருப்பவர் தான் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியைச் சேர்ந்த மகாதேவன் மனைவி பழனியம்மாள். வயதில் செஞ்சுரி அடித்து தனது 101ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார், பாட்டி பழனியம்மாள்.

அதுமட்டுமின்றி ஐந்து தலைமுறைகளைக் கடந்துள்ள பாட்டிக்கு 4 மகன்கள், 3 மகள்கள், 19 பேரன்கள், பேத்திகள், 25 கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள், 2 எள்ளுப் பேத்திகள் உள்ளனர்.

101 வயது பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம்

இவர் இன்றும் தனது பணிகளை தானே செய்து வருகிறார். மனிதன் எப்படி ஆரோக்கியம் பேண வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்துவரும் இந்த பாட்டியின் 101ஆவது பிறந்த நாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து கேக் வெட்டியும், பாத பூஜைகள் செய்தும் வெகு சிறப்பாக கொண்டாடினர்.

இதையும் படிங்க...குட்டி நாயைத் தத்தெடுத்து தாயான ஆண் குரங்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.